திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் விரைந்து வழிபாடு செய்ய ஏற்பாடு: அமைச்சர் ரமேஷ்
May 24, 2026, 16:07 IST
திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் விரைந்து வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில், “திருவண்ணாமலை கோவிலில் அவ்வப்போது ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் தரிசனத்துக்கு ஏற்படும் கால தாமதம் தொடர்பாக கோவில் நிர்வாகிகளிடம் பேசி தற்போதைக்கு விரைவாக பக்தர்கள் தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளது. விரைவில் திருவண்ணாமலை கோவிலில் ஆய்வு நடத்தப்பட்டு பக்தர்கள் முறையாக விரைவாக தரிசனம் செய்ய புதிய ஏற்பாடுகள் செய்யப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.