2 மாதங்களுக்கு முன் மனைவியை கொன்று டிரம்மில் புதைத்த கணவன் - சிக்கியது எப்படி..?
கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் சிலம்பரசன் இவருக்கு வயது 39. இவரது மனைவி பிரியா (வயது 26 ) இவர்களுக்கு ஆறு மற்றும் ஏழு வயதில் இரு மகன்கள் உள்ளனர். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் சந்தேகம் என்ற கொடிய நோய் பற்றியது,மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த சிலம்பரசன், அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், மனமுடைந்த பிரியா, ஆரணி பக்கத்தில் இருக்கும் அவர் தாய் வீட்டிற்கு செல்வதும் கணவன் சில நாட்கள் பிறகு போய் சமாதானப்படுத்தி வீட்டிற்கு கூட்டிட்டு வருவதுமாக இருந்துள்ளது.
கடந்த 2 மாதங்களாக, பிரியாவை குறித்த எந்த தகவலும் இல்லாததால் நேற்று முன்தினம் பிரியாவின் குடும்பத்தினர் மகளை பார்க்க துராபள்ளம் கிராமத்திற்கு வந்துள்ளனர். அப்போது, இரண்டு மாதங்களுக்கு முன் வேறு ஒருவருடன் பிரியா ஓடிவிட்டதாக சிலம்பரசன் தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களாக அம்மாவை காணவில்லை என குழந்தைகளும் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பிரியாவின் பெற்றோர், ஆரம்பாக்கம்காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரின் விசாரணையில் பிரியாவை சிலம்பரசன் கொலை செய்து புதைத்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
தொடர் விசாரணையில் பிரியாவின் நடத்தையில் சந்தேகமடைந்த சிலம்பரசன் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி ஏற்பட்ட தகராறின் போது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.அன்று இரவு, பிரியாவின் உடலை பிளாஸ்டிக் டிரம்மில் வைத்து பைக்கில் எளாவூர் ஏழு கண் பாலம் நோக்கி 3 கி.மீ., சென்றுள்ளார். அங்குள்ள சுடுகாடு அருகே பள்ளம் தோண்டி , பிரியாவின் உடலை புதைத்து பேரலை வீசி சென்றது தெரிய வந்தது.
கும்மிடிப்பூண்டி தாசில்தார் சுரேஷ்பாபு முன்னிலையில் அழுகிய பிரியா வின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அதே இடத்தில் திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார், சிலம்பரசனை கைது செய்தனர்.