கடித்த பாம்பை பாட்டிலில் போட்டு கையோடு எடுத்து வந்த விவசாயி.. மருத்துவமனையில் பரபரப்பு
சிவகாசியில் தன்னைக் கடித்த பாம்பை அடித்துக் கொன்று பாட்டிலிலடைத்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகாசி அருகே நடுவப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 42). விவசாயியான இவர் தனது தோட்டத்தில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். வரப்பில் அமர்ந்திரு ந்தபோது எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று விவசாயி தங்கராஜைக் கடித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தன்னைக் கடித்த பாம்பை அடித்துக் கொன்றதுடன் அதனைக் குளிர்பான பாட்டிலினுள் அடைத்து மூடியவாறுசிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். பணியிலிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் தங்கராஜுக்கு முதலுதவிச் சிகிச்சை யளித்தனர். தன்னைக் கடித்த பாம்பையே அடித்துக் கொன்று அதனையும் எடுத்துக்கொண்டு விவசாயி தங்கராஜ் சிகிச்சைக்கு வந்த சம்பவத்தால் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனைத்து தரப்பினர்களிடையே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.