தீபாவளியை ஒட்டி தாம்பரம் - கூடுவாஞ்சேரி இடையே சிறப்பு மின்சார ரயில் இயக்க முடிவு
Oct 14, 2025, 21:28 IST
தீபாவளியை ஒட்டி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லும் பயணிகள் வசத்க்காக தாம்பரம்- கூடுவாஞ்சேரி இடையே வரும் 17 ஆம் தேதி சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கிளாம்பாக்கம் பஸ் நிலையம் செல்லும் பயணிகளின் வசதிக்காக வரும் 17-ந்தேதி தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து இரவு 7.45, 7.53,8.10 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரெயில் இரவு 8.05, 8.17, 8.35 மணிக்கு கூடுவாஞ்சேரி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.