10ம் வகுப்பு பொதுத்தேர்வு : கால அட்டவணை, தேர்வு முடிவுகள் எப்போது? முழு விவரம் இதோ..!!
2024 - 2025ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளிடப்பட்டுள்ளது.
2024 - 2025ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை - அரசு தேர்வுகள் இயக்கம் நடத்தும் 2024-2025 கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வை மொத்தமாக 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுதவுள்ளதாக தெரிவித்தார்.
இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 15ம் தேதி முடிவடைகிறது. அதன்படி,
மார்ச் 28, 2025 - வெள்ளிக்கிழமை - தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்.
02 ஏப்ரல் 2025 - புதன்கிழமை - ஆங்கிலம்
04 ஏப்ரல் 2025 - வெள்ளிக்கிழமை - விருப்ப மொழிப்பாடம்
07 ஏப்ரல் 2025 - திங்கள் கிழமை - கணிதம்
11 ஏப்ரல் 2025 - வெள்ளிக்கிழமை - அறிவியல்
15 ஏப்ரல் 2025 - செவ்வாய்கிழமை - சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வும் நடைபெறுகிறது.
மேலும், பிப்ரவரி 22ம் தேதி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கும் என்றும், பிப்ரவரி 28ம் தேதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.