பாலில் பாதாம் கலந்து பருகினால் என்ன நன்மை தெரியுமா ?
பொதுவாக ஆரோக்கியமான ஒரு மனிதன் தினம் குறைந்தது எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் .இந்த தூக்கத்திற்கு பலர் தூக்க மாத்திரை சாப்பிடு வதுண்டு ,ஆனால் இயற்கையான உணவுகளை உண்டு வருவதால் எப்படி தூக்கத்தை வர வைக்கலாம் என்று இந்த ப்பதிவில் பாக்கலாம்
1.பாதாமில் நிறைய ஆரோக்கியம் அடங்கியுள்ளது .ஒருவர் தூங்க செல்வதற்கு முன்போ அல்லது பகல் வேளையிலோ சிறிதளவு பாதாம் சாப்பிட்டுவந்தால் தூக்கத்தை மேம்படுத்தும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
2.பாதாமில் நிறைய விட்டமின் உள்ளது .இதில் தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனான மெலடோன் மற்றும் தூக்கத்தை ஊக்குவிக்கும் கனிமமான மெக்னீசியம் இதில் ஏராளம் இருக்கிறது.
3.இந்த பாதாமின் சத்துக்கள் நீண்ட நேரம் மற்றும் ஆழமான தூக்கத்திற்கு வழிவகை செய்யும்.
4.பாதாம் மூளை மற்றும் நரம்புகளில் இனிமையான விளைவுகளை ஏற்படுத்தும் டிரிப்டோபன் அமினோ அமிலத்தின் செயல்பாட்டையும் மேம்படுத்தும்.
5.அதன் காரணமாக தூக்கம் தடைபடுவது தவிர்க்கப்படும்.
6.அது மட்டுமல்லாமல் தூக்கத்தை ஊக்குவிக்கும் தன்மை பாலுக்கும் இருக்கிறது.
7.ஒருவர் வெறுமனே பாலை பருகவேண்டாம் .அந்த பாலில் அதில் சிறிதளவு மஞ்சள், குங்குமப்பூ கலந்து பருகினால் நன்றாக தூக்கம் வரும்.
8.இப்படி பாலில் மஞ்சள் குங்குமப்பூ சேர்த்து குடிப்பதால் டிரிப்டோபன் அமினோ அமிலம் நிறைந்திருக்கிறது.
9.மேலும் சிலர் நடைப்பயிற்சி, யோகா செய்வர் .இப்படி செய்பவர்கள் பால் பருகி வந்தால் எந்த இடையூறுமின்றி நன்றாக தூங்கி எழலாம்..