“திமுகவை இந்த மண்ணில் திரும்பவும் தலையெடுக்க விட கூடாது” டிடிவி தினகரன் சூளுரை!

 

“திமுகவை இந்த மண்ணில் திரும்பவும் தலையெடுக்க விட கூடாது” டிடிவி தினகரன் சூளுரை!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வென்று ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி அமைக்க சபதமேற்போம் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

“திமுகவை இந்த மண்ணில் திரும்பவும் தலையெடுக்க விட கூடாது” டிடிவி தினகரன் சூளுரை!

தமிழக சட்ட பேரவை தேர்தலை இலக்காக கொண்டு அரசியல் கட்சிகள் செயல்பட்டு கொண்டிருகின்றன. அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியினர் கூறி வரும் நிலையில் 8 மாதத்தில் திமுக ஆளுங்கட்சியாக மாறும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் உறுதிப்பட கூறியுள்ளார்.

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வென்று ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி அமைக்க சபதமேற்போம். இன்னும் எட்டு மாதங்களில் நாங்களே ஆளுங்கட்சி என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கும் தீய சக்தியான திமுகவை இந்த மண்ணில் திரும்பவும் தலையெடுக்க விடாமல் செய்கின்ற ஆற்றல் அம்மாவின் உண்மையான பிள்ளைகளான நமக்கு தான் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் நேரம் நெருங்குகிறது.பதுங்குவது ஆக நம்மைப் பார்த்து இன்று சிரிப்பவர்கள் களத்தில் சீறிப்பாய்ந்து பணியாற்றும் போது காணாமல் போய்விடுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.