“இரு இளைஞர்கள் முன்விரோதத்தால் கொடூர கொலை” டிடிவி தினகரன் கடும் கண்டனம்!!

 

“இரு இளைஞர்கள் முன்விரோதத்தால் கொடூர கொலை” டிடிவி தினகரன் கடும் கண்டனம்!!

அரக்கோணத்தில் இரட்டைக்கொலை வழக்கில் இருவர் கொல்லப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

“இரு இளைஞர்கள் முன்விரோதத்தால் கொடூர கொலை” டிடிவி தினகரன் கடும் கண்டனம்!!

அரக்கோணத்தை அடுத்த சோமனூர் காலனியில் தேர்தல் முன்விரோதம் காரணமாக அர்ஜுனன், சூர்யா என்கின்ற இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர். அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி என்பவரின் மகன் சத்யா தலைமையிலான 10 பேர் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளனர். உயிரிழந்த சூர்யாவுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆகும் நிலையில் , அர்ஜுனனுக்கு திருமணமாகி 8 மாத கைக்குழந்தையுடன், அவரது மனைவி 4 மாத கர்ப்பமாக உள்ளார். அரக்கோணத்தில் நடந்த இந்த கொடூர கொலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“இரு இளைஞர்கள் முன்விரோதத்தால் கொடூர கொலை” டிடிவி தினகரன் கடும் கண்டனம்!!

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அரக்கோணத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அர்ஜூன்,சூர்யா என்ற இரு இளைஞர்கள் முன்விரோதத்தால் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

பெரும் அதிர்ச்சியளிக்கக்கூடிய இந்தப் பாதகத்தைச் செய்தவர்கள் மீது காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். கொல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இத்தகைய வன்மம் நிறைந்த செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுத்திட வேண்டியது அவசியம்” என்று பதிவிட்டுள்ளார்.