ஸ்டாலின் அரசு ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்று செய்வது சரியில்லை : தினகரன் ட்வீட்!

 

ஸ்டாலின் அரசு ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்று செய்வது சரியில்லை : தினகரன் ட்வீட்!

அரசு நிர்வாகத்தில் காலத்திற்கு ஏற்ப சீர்திருத்தங்களைச் செய்வது அவசியம் என்றாலும், அவற்றை ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்று செய்வது சரியாக இருக்காது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் அரசு ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்று செய்வது சரியில்லை : தினகரன் ட்வீட்!

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவி இடத்தை ரத்து செய்து, அவருக்கான அதிகாரத்தை பள்ளிக்கல்வி ஆணையரிடம் ஒப்படைப்பது என்ற தமிழக அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் அதிருப்தி குரல்கள் எழுந்திருக்கின்றன.

அரசு நிர்வாகத்தில் காலத்திற்கு ஏற்ப சீர்திருத்தங்களைச் செய்வது அவசியம் என்றாலும், அவற்றை ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்று செய்வது சரியாக இருக்காது. துறை சார்ந்தவர்களிடம் முறையாக கலந்தாலோசித்து அதற்கேற்ப முடிவுகளை எடுக்க வேண்டும்.

அத்தகைய முடிவுகளை எடுத்து செயல்படுத்தும்போது,முன்பு இருந்ததைவிட நிர்வாகப் பணிகள் சிறப்பாக அமைய வேண்டுமே தவிர,அத்துறையில் இருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது.எனவே, இப்பிரச்னையில் தமிழக அரசு நிதானமாக செயல்பட்டு உரிய முடிவினை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.