“பயத்தில் தாங்கள் அமைச்சர்கள் என்பதையே மறந்துவிட்டனர்” – டிடிவி தினகரன்

 

“பயத்தில் தாங்கள் அமைச்சர்கள் என்பதையே மறந்துவிட்டனர்” – டிடிவி தினகரன்

அதிமுகவை கைப்பற்றுவதற்கும் இரட்டை இலையை மீட்கும் பணி தொடரும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

“பயத்தில் தாங்கள் அமைச்சர்கள் என்பதையே மறந்துவிட்டனர்” – டிடிவி தினகரன்

தமிழக – கர்நாடக எல்லையான ஜூஜுவாடியில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ” சசிகலா வருகைக்கு இடையூறு செய்பவர்கள் நீதிமன்ற அவமதிப்பு ஆளாவார்கள். காவல்துறை நடுநிலையாக செயல்படவேண்டும். அப்படி செயல்படாவிட்டால் அவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள்” என்றார். தொடர்ந்து பேசி அவரிடம் சசிகலாவின் முதல் பணி என்ன என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது . அதற்கு பதிலளித்த அவர், “அதை அவர்கள் சொல்வார்கள். அதிமுகவை கைப்பற்றுவதற்கும் , இரட்டை இலையை மீட்பதற்கும் வேலை தொடரும்” என்றார்.

“பயத்தில் தாங்கள் அமைச்சர்கள் என்பதையே மறந்துவிட்டனர்” – டிடிவி தினகரன்

அத்துடன் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என டிஜிபி அலுவலகத்தில் அதிமுக அமைச்சர்கள் புகார் அளித்தது தொடர்பாக பேசிய அவர், “பயத்தில் தாங்கள் அமைச்சர்கள் என்பதை அவர்கள் மறந்து விட்டனர்; இது வேதனை அளிக்கிறது.அமமுக தொண்டர்கள் யாரும் அதிமுக கொடியை பிடிக்க மாட்டார்கள். சின்னம்மாவை வரவேற்க வந்த அதிமுக தொண்டர்கள்தான் கொடி பிடித்துள்ளனர் ” என்றார்.