அமமுக பிரமுகர் பரமசிவன் ஐயப்பன் திமுகவில் இணைந்தார்… டிடிவி தினகரன் ஷாக்!

 

அமமுக பிரமுகர் பரமசிவன் ஐயப்பன் திமுகவில் இணைந்தார்… டிடிவி தினகரன் ஷாக்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது. இக்கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. கோவில்பட்டியில் போட்டியிட்ட தினகரனும், விருத்தாச்சலத்தில் போட்டியிட்ட பிரேமலதாவும் தோல்வியை தழுவினர். அமமுக – தேமுதிக கூட்டணி படுதோல்வி அடைந்தது தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமமுக பிரமுகர் பரமசிவன் ஐயப்பன் திமுகவில் இணைந்தார்… டிடிவி தினகரன் ஷாக்!

இந்த நிலையில், அமமுக முன்னாள் திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலாளர் பரமசிவன் ஐயப்பன் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மகன் பிரபாகரன் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். திமுகவில் இருந்த பரமசிவன் அய்யப்பன் 2006 முதல் 2011 வரை கவுன்சிலராக இருந்தார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் கவுன்சிலராக தேர்வானார்.

பின்னர், அதிமுகவில் இணைந்த பரமசிவன் ஐயப்பன் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரனின் அமமுக இணைந்தார். அவருக்கு நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவர் அமமுக சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டார். பரமசிவன் பிரபாகரன் திமுகவில் இணைந்தது டிடிவி தினகரனை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.