அமமுகவில் அதிரடி மாற்றம் : டிடிவி தினகரனின் திடீர் முடிவு!

 

அமமுகவில் அதிரடி மாற்றம் : டிடிவி  தினகரனின் திடீர் முடிவு!

மத்திய சென்னை , திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு அமமுக கட்சி சார்பில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமமுகவில் அதிரடி மாற்றம் : டிடிவி  தினகரனின் திடீர் முடிவு!

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மத்திய சென்னை மத்திய மாவட்டக் கழக செயலாளராகவும், திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளராகவும், மயிலாடுதுறை மாவட்டக் கழக செயலாளராகவும் கீழ்காண்பவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

அமமுகவில் அதிரடி மாற்றம் : டிடிவி  தினகரனின் திடீர் முடிவு!

மத்திய சென்னை மத்திய மாவட்டக் கழக செயலாளராக திரு.ஹாஜி K.முகமது சித்திக், திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளராக திரு.P.V.சங்கர் ராஜா,மயிலாடுதுறை மாவட்டக் கழக செயலாளராக திரு.P.பாரிவள்ளல் அவர்கள் இதுவரை மத்திய சென்னை மத்திய மாவட்டம் கழகம், துறைமுகம் கிழக்கு பகுதி செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.ஹாஜி K.முகமது சித்திக் அவர்களும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகம், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.P.V.சங்கர் ராஜா அவர்களும், மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றிய கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.P.பாரிவள்ளல் அவர்களும் அவரவர் வகித்துவரும் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டக் கழக செயலாளர்களுக்கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்