விஷமக் குரல்களை அடக்க வேண்டும் – டிடிவி தினகரன் ட்வீட்!

 

விஷமக் குரல்களை அடக்க வேண்டும் – டிடிவி தினகரன் ட்வீட்!

தமிழகத்தை பிரிக்க எண்ணும் விஷமக் குரல்களை அடக்க வேண்டுமென அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஷமக் குரல்களை அடக்க வேண்டும் – டிடிவி தினகரன் ட்வீட்!

அந்த பதிவில், தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என எழுந்திருக்கும் விஷமக்குரல்களை மத்திய, மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே அடக்கிட வேண்டியது அவசியம். எந்தத் தரப்பு மக்களிடமும் அப்படி ஒரு சிந்தனையோ, கோரிக்கையோ எழாத போது சுயலாபத்திற்காக தமிழர்களை சாதிரீதியாக கூறுபோட நினைப்பதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது.

ஏற்கனவே, மொழிவாரி மாநிலப் பிரிவினையால் நமக்கு ஏற்பட்ட இழப்புகள் இன்றுவரை தொடரும் நிலையில், சாதியை முன்வைத்து தமிழ்நாட்டைக் கூறுபோட்டால் அது தமிழினத்திற்கு பெரும் கேடாக முடிந்துவிடும். எனவே, வெள்ளைக்காரர்களைப் போல பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளாமல், வளர்ச்சியைப் பற்றி யோசிப்பதே புத்திசாலித்தனமாக இருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தை இரண்டு மாநிலமாக பிரித்து கொங்கு மண்டலத்தை புதுச்சேரியை போல யூனியன் பிரதேசமாக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதற்கு மத்திய அரசுக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும் மாநில அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அரசால் இதை செய்ய முடியாது என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் இந்த முயற்சிக்கு அரசியல் தலைவர்கள் கண்டனக் குரல்களை எழுப்பி வரும் நிலையில் டிடிவி தினகரன் இவரு பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.