மேகதாது அணை பிரச்னை; 6ம் தேதி ஆர்ப்பாட்டம் : டிடிவி தினகரன் அறிவிப்பு!

 

மேகதாது அணை பிரச்னை; 6ம் தேதி ஆர்ப்பாட்டம் : டிடிவி தினகரன் அறிவிப்பு!

மேகதாட்டு பகுதியில் அணைக் கட்டும் முயற்சியை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் வரும் 6ம் தேதி தஞ்சாவூரில் மாபெரும் போராட்டத்தை நடத்தவுள்ளனர்.

இது தொடர்பாக அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிம் ஜீவாதாரமாக விளங்கும் காவிரி நதிநீரில் நமக்கு உரிய பங்கினை தராமல் பல்வேறு காலகட்டங்களில் கர்நாடகா வஞ்சித்து வருகிறது. அதிலும் தீய சக்தியான திமுக எப்போதெல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் காவிரியிலும் அதன் துணை ஆறுகளின் புதிய அணைகள் கட்டப்படுவது வழக்கமாக வைத்திருக்கும் கர்நாடகா இப்போதும் மேகேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என அடம்பிடிக்கிறது.

மேகதாது அணை பிரச்னை; 6ம் தேதி ஆர்ப்பாட்டம் : டிடிவி தினகரன் அறிவிப்பு!

இதனை கண்டித்தும் மேகதாது அணையை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காவிரிப் பிரச்சினையில் உறுதியாக நின்று சட்டப்படியான தீர்ப்புகளை நமக்கு பெற்றுத் தந்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருகிற ஆகஸ்டு 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணியளவில் தஞ்சாவூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. டிடிவி தினகரன் இதனை தலைமையேற்கிறார்.

தமிழ்நாட்டின் உரிமையை காத்திட நடைபெறும் இப்போராட்டத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக கடைப்பிடித்து மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, வட்ட, கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.