“தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே” – அமித்ஷா தமிழில் ட்வீட்!

 

“தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே” – அமித்ஷா தமிழில் ட்வீட்!

2 நாட்கள் அரசு முறை பயணமாக சென்னைக்கு வந்திருக்கும் அமித்ஷா தற்போது எம்.ஆர்.சி நகரில் இருக்கும் லீலா பேலஸில் தங்க வைக்கப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அமித்ஷாவை அதிமுக மற்றும் பாஜகவினர் ஆடல் பாடலுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் சாலை மார்க்கமாக லீலா பேலஸுக்கு புறப்பட்ட அவர், வழியில் காரை நிறுத்தி கீழே இறங்கி தொண்டர்களுக்கு கையசைத்து வணக்கத்தை தெரிவித்தார்.

“தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே” – அமித்ஷா தமிழில் ட்வீட்!

இவ்வாறு ஒருபுறம் அமித்ஷாவுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டு வரும் நிலையில், மற்றொரு புறம் #gobackamitshah என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சாலையில் அமித்ஷா நடந்து சென்ற போது கூட ஒரு நபர், அவர் மீது பதாகையை வீச முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை வந்தடைந்தேன்! தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்!” என தமிழில் பதிவிட்டுள்ளார். மேலும், உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.