தமிழகத்திலேயே நேர்மையான அதிகாரி அண்ணாமலைதான் – அமித்ஷா

 

தமிழகத்திலேயே நேர்மையான அதிகாரி அண்ணாமலைதான் – அமித்ஷா

கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின்போது பேசிய அமித்ஷா, “திமுகவிற்கும் காங்கிரசுக்கும் மக்களை பற்றி கவலை இல்லை, ஆனால் பிரதமர் மோடிக்கு தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும் அதிக அக்கறை உள்ளது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.

தமிழகத்திலேயே நேர்மையான அதிகாரி அண்ணாமலைதான் – அமித்ஷா

தமிழகத்திற்கு சிறப்பான வளர்ச்சியை, அதிமுக பாஜக கூட்டணியால் தான் முடியும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு மோடி ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார். ஊழல் கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடாது, மக்களுக்கு வளர்ச்சி கொடுக்கும் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும். தமிழகத்திலேயே நேர்மையான அதிகாரி அண்ணாமலைதான்” என புகழ் பாடினார்.