அதிமுக ஆட்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்- அமித்ஷா

 

அதிமுக ஆட்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்- அமித்ஷா

இரண்டு நாள் அரசு முறை பயணமாக சென்னை வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது, கலைவாணர் அரங்கில் தமிழக அரசு நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். ரூ.67,378 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளையும் அமித்ஷா காணொளி வாயிலாக தொடக்கி வைத்தார். தொடர்ந்து மேடையில் அமித்ஷா உரையாற்றிவருகிறார். அவரது உரையை அகில இந்திய வானொலி சேர்ந்த சுதர்சன் என்பவர் மொழிபெயர்த்துவருகிறார்.

அதிமுக ஆட்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்- அமித்ஷா

மேடையில் பேசிய அமைச்சர் அமித்ஷா, “கொரனா தடுப்பில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரனாவில் இருந்து குணமடைந்தவர்களில் தேசிய சராசரியை விட தமிழகம் அதிகம் பதிவு செய்துள்ளது. திமுக தலைவர்கள் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்துள்ளதாக குற்றம்சாட்டுகிறார்கள். அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். பத்து ஆண்டுகள் காங்கிரஸ் கூட்டணியில் நீங்கள் இருந்த போது தமிழ்நாட்டுக்கு என்ன நலத்திட்டங்களை கொண்டு வந்தீர்கள் என பட்டியலிட தயாரா? நான் இன்று சென்னை வந்துள்ளேன். மோடி அரசு தமிழகத்துக்கு செய்த நல திட்டங்களை நான் பட்டியலிட்டு சொல்ல தயாராக உள்ளேன். நீங்கள் தயாரா? 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து காங்கிரஸ்-திமுக அரசு தமிழகத்துக்கு செய்ததை பட்டியலிட முடியுமா? நாங்கள் செய்ததை பட்டியலிட தயார்

பாறை போன்ற அதிமுக ஆட்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். மன்மோகன் ஆட்சியை விட எங்கள் ஆட்சியில் தமிழகத்துக்கு அதிக அளவில் பட்ஜெட் ஒதுக்கினோம்” எனக் கூறினார்.