அமித்ஷா சென்னை வருகை ரத்து!

 

அமித்ஷா சென்னை வருகை ரத்து!

இரண்டு நாள் பயணமாக கடந்த நம்பர் மாதம் 21ஆம்தேதி அன்று உள்துறைஅமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். அப்போது, அவர் ரஜினிகாந்த்தை சந்திப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால், கடைசி வரையிலும் அமித்ஷாவை சந்திக்கவே இல்லை. அதன்பிறகு அமித்ஷாவின் அழுத்தத்தினால்தான் ரஜினி கட்சி ஆரம்பிக்கிறார் என்ற பேச்சுகள் இருந்த நிலையில், ரத்த அழுத்த காரணமாக கட்சி தொடங்கவில்லை என்று ரஜினி அறிவித்துவிட்டார்.

அமித்ஷா சென்னை வருகை ரத்து!

இதனிடையே வரும் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை அன்று நடைபெற இருக்கும் துக்ளக் பத்திரிகையின் ஆண்டுவிழாவில் பங்கேற்க அமித்ஷா சென்னை வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு துக்ளக் பொன்விழாவில் துணைஜனாதிபதி வெங்கையா நாயுடுவுடன் ரஜினியும் பங்கேற்றார். கடந்த 2018 ஆம் தேதி நடந்த துக்ளக் பத்திரிகையின் 48வது ஆண்டு விழாவில் அப்போதைய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பங்கேற்றார் என்பது குறிப்பிடதக்கது.