ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை!

 

ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை!

சென்னை லீலா பேலஸில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை!

அரசு முறை பயணமாக நேற்று மாலை 3 மணிக்கு அமித்ஷா சென்னை வந்தடைந்தார். அவருக்கு அதிமுக அரசும் பாஜகவும் இணைந்து ஆடல் பாடல்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழி நெடுகிலும் ஆர்வத்துடன் நின்று கொண்டிருந்த மக்களை கண்டு மகிழ்ச்சி அடைந்த அமித்ஷா, சட்டென காரில் இருந்து கீழே இறங்கி சாலையில் கை அசைத்துக் கொண்டே ஒரு நடை போட்டார். அப்போது, அங்கிருந்த நபர் ஒருவர் பதாகையை தூக்கி அமித்ஷா மீது வீச முயன்றதால், அவர் அங்கிருந்து லீலா பேலஸுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை!

பின்னர்,நேற்று மாலை 4.30 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றார். அப்போது, 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து 6 மணிக்கு பாஜக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அமித்ஷா, கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்திய பிறகு மீண்டும் தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு திரும்பினார். இந்த நிலையில், அமித்ஷா ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளுடன் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்தவிருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகனும் பங்கேற்கிறார்.