கொரோனாவில் இருந்து மீண்ட அமித்ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

 

கொரோனாவில் இருந்து மீண்ட அமித்ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

இந்தியாவில் கொரோனாவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பல தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கடந்த 2 ஆம் தேதி தனக்கு கொரோனா உறுதியாகியதாக அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். சமீபத்தில், அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததாகவும் அவர் குணமடைந்துவிட்டதாகவும் பாஜக எம்.பி மனோஜ் திவாரி தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்து விட்டதால் உடனடியாக அந்த பதிவை டெலிட் செய்து விட்டார்.

கொரோனாவில் இருந்து மீண்ட அமித்ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

இதனைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தான் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாகவும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி, சில நாட்கள் வீட்டிலேயே தனிமையில் இருப்பேன் என அமித்ஷா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அமித்ஷா டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் போது அவரது உடல்நிலை மோசமானதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனாவில் இருந்து மீண்ட பிறகும் அவர் ஏன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறித்த தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.