பாஜக மாவட்ட , மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை

 

பாஜக மாவட்ட , மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை

இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக சென்னை வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை, கலைவாணர் அரங்கில் தமிழக அரசு நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். ரூ.67,378 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளையும் அமித்ஷா காணொளி வாயிலாக தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள், பாஜக பிரமுகர்கள், அதிமுக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பாஜக மாவட்ட , மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை

தொடர்ந்து நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு எம்.ஆர்.சி நகரில் இருக்கும் லீலா பேலஸ் ஹோட்டலுக்கு அமித்ஷா சென்றார். அங்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆலோசனை முடிந்த பின்பு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். தொடர்ந்து பாஜக மாவட்ட – மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்திவருகிறார். இந்த ஆலோசனையில் பி.எல்.சந்தோஷ் , எல்.முருகன், சி.டி.ரவி ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் அமித்ஷாவுக்கு பாஜகவில் புதிதாக இணைந்த கு.க.செல்வம், கே.பி.ராமலிங்கம், குஷ்பு, சரவண குமார் ஆகியோரை முருகன் அறிமுகப்படுத்தி வைத்தார். இதனிடையே அமித்ஷாவிற்கு வெள்ளி வேலும் முருகன் சிலையும் தமிழக பாஜக சார்பாக பரிசாக அளிக்கப்பட்டது.