அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

 

அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஆகஸ்ட் 14ம் தேதி எடுத்த கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. இதையடுத்து அவர் வீடு திரும்பினார் . ஆனால் மீண்டும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி அமித்ஷா வீடு திரும்பினார்.

அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

இந்நிலையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு கடந்த ஆக.31 வீடு திரும்பிய நிலையில் அமித்ஷா மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனைக்காக அமித்ஷா அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.