பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நடிகர் அமிதாப் பச்சன் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். எனது குடும்பத்தினரும் ஊழியர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம். கடந்த பத்து நாட்களில் என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
T 3590 -I have tested CoviD positive .. shifted to Hospital .. hospital informing authorities .. family and staff undergone tests , results awaited ..
All that have been in close proximity to me in the last 10 days are requested to please get themselves tested !— Amitabh Bachchan (@SrBachchan) July 11, 2020
அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததாகவும், மருத்துவமனைக்கு செல்லும் முன் வீட்டில் தனிமையில் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு அறிவித்ததில் இருந்து அமிதாப் பச்சன் வீட்டில் தான் இருந்து வந்துள்ளார். சமீபத்தில் தான் டிவி ரியாலிட்டி ஷோவான குரோர்பதி நிகழ்ச்சிக்கான ப்ரொபஷனல் வீடியோ மற்றும் வேறு சில படங்களின் புரமோஷனுக்கு அமிதாப் பச்சன் வீட்டில் சூட்டிங் செய்துள்ளனர். அப்பொழுது அங்கு வந்த புரோடக்சன் குழுவுடன் தொடர்பில் இருந்திருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவர் சீக்கிரம் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.