கொரோனாவிலிருந்து குணமடைந்தார் அமிதாப் பச்சன்..!

 

கொரோனாவிலிருந்து குணமடைந்தார் அமிதாப் பச்சன்..!

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களை தொடர்ந்து, நடிகையும் அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய் தம்பதி மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

கொரோனாவிலிருந்து குணமடைந்தார் அமிதாப் பச்சன்..!

கடந்த சில நாட்களுக்கு முன் -ஐஸ்வர்யா ராய், மற்றும் அவரது மகள் ஆராத்யா கொரோனாவிலிருந்து குணமடைந்தார். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கொரோனாவிலிருந்து குணமடைந்து அமிதாப் பச்சன் வீட்டில் ஓய்வில் இருப்பதாக மகன் அபிஷேக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.