‘2 முறை ரிசல்ட் நெகட்டிவ்’.. கொரோனாவில் இருந்து மீண்டார் அமிதாப் பச்சன்

 

‘2 முறை ரிசல்ட் நெகட்டிவ்’.. கொரோனாவில் இருந்து மீண்டார் அமிதாப் பச்சன்

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அமிதாப் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் அவரும்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

‘2 முறை ரிசல்ட் நெகட்டிவ்’.. கொரோனாவில் இருந்து மீண்டார் அமிதாப் பச்சன்

இவர்களை தொடர்ந்து, நடிகையும் அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய் தம்பதி மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 2 முறை கொரோனா பரிசோதனை செய்தும் ரிசல்ட் நெகட்டிவ் என வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.