கொரோனாவில் இருந்து தான் குணமடைந்து விட்டதாக அமித்ஷா ட்வீட்!

 

கொரோனாவில் இருந்து தான் குணமடைந்து விட்டதாக அமித்ஷா ட்வீட்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பல அரசியல் தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கடந்த 2 ஆம் தேதி தனக்கு கொரோனா உறுதியாகியதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். சமீபத்தில், அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததாக பாஜக எம்.பி மனோஜ் திவாரி தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்து விட்டதால் உடனடியாக அந்த பதிவை டெலிட் செய்து விட்டார்.

கொரோனாவில் இருந்து தான் குணமடைந்து விட்டதாக அமித்ஷா ட்வீட்!

இந்த நிலையில் தான் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாக அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “இன்று தனது கொரோனா சோதனை அறிக்கை நெகட்டிவ் என வந்துள்ளது. இதற்காக நான் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். எனக்காக பிரார்தித்த அனைவருக்கும் நன்றிகள். மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இன்னும் சில நாட்கள் வீட்டில் தனிமையில் இருப்பேன்.” என குறிப்பிட்டுள்ளார்.