“இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர் நடிகர் விவேக்” – அமித் ஷா அஞ்சலி!

 

“இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர் நடிகர் விவேக்” – அமித் ஷா அஞ்சலி!

நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு ஏற்பட்டதால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம் வருத்தத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

“இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர் நடிகர் விவேக்” – அமித் ஷா அஞ்சலி!

பல்வேறு தரப்பினரும் ட்விட்டரில் இரங்கல் தெரிவிக்கிறார்கள். ஏராளமானோர் நேரில் சென்று விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருந்தார். தற்போது உள்துறை அமைச்சர் விவேக் மறைவுக்கு அஞ்சலி தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார்.

அவரது ட்வீட்டில், “நடிகர் விவேக் மரணம் பற்றி அறிந்து வேதனையுற்றேன். அவரது நடிப்பின் அற்புதமான திறமை அவரை மிகச்சிறந்த நடிகராக்கியது. தன் திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர். அதற்காக எப்போதும் நினைவு கூறப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கல். ஓம்சாந்தி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.