‘ஸ்டாலினுக்கு உதயநிதியை பற்றி மட்டும் தான் கவலை’ – அமித்ஷா கடும் விமர்சனம்!

 

‘ஸ்டாலினுக்கு உதயநிதியை பற்றி மட்டும் தான் கவலை’ – அமித்ஷா கடும் விமர்சனம்!

திமுக, காங்கிரஸ் கட்சிகள் குடும்ப அரசியல் செய்து வருவதாகவும் அவர்களுக்கு தங்களது குடும்பத்தை தவிர மக்கள் மீது அக்கறை இல்லை என்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா விமர்சித்தார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கலிவரதனை ஆதரித்து மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், வரும் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக பாஜக பாமக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். எம்ஜிஆர் வழியில் ஜெயலலிதா தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் சென்றார். அவரை தொடர்ந்து மோடியின் வழிகாட்டுதலில் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்கிறார் என்றார்.

‘ஸ்டாலினுக்கு உதயநிதியை பற்றி மட்டும் தான் கவலை’ – அமித்ஷா கடும் விமர்சனம்!

தொடர்ந்து பேசிய அமித்ஷா, தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என திமுகவை சேர்ந்தவர்கள் ஆளும் கட்சியை தரக்குறைவாக பேசி வருகிறார்கள். முதல்வரின் தாயாரை பற்றி ஆ.ராசா கடுமையாக பேசியுள்ளார். சோனியா காந்திக்கு ராகுல் காந்தியைப் பற்றியும் ஸ்டாலினுக்கு உதயநிதியை பற்றியும் மட்டும் தான் கவலை. அவர்கள் தமிழக மக்கள் மீது அக்கறை கொள்ளவில்லை என்று கடுமையாக சாடினார்.

மேலும், பிரதமர் மோடி சோனியா காந்தி, ஸ்டாலினை போன்றவர் இல்லை. தமிழக மக்கள் மீது அன்பும் பாசமும் வைத்திருக்கிறார். தமிழக மக்கள் பற்றி மோடியை விட யாரும் அதிகமாக கவலைப்பட முடியாது. ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் திமுகவும் காங்கிரஸும் தமிழக மக்களுக்கு எதுவும் செய்யாது என்று தெரிவித்தார்.