பாகிஸ்தானும், சீனாவும் எதை விரும்புகிறதோ அதை நீங்கள் சொல்கிறீர்கள்… ராகுல் காந்தியை தாக்கிய அமித் ஷா

 

பாகிஸ்தானும், சீனாவும் எதை விரும்புகிறதோ அதை நீங்கள் சொல்கிறீர்கள்… ராகுல் காந்தியை தாக்கிய அமித் ஷா

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்களுடனான மோதலின்போது இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். அது முதல் (கடந்த 15ம் தேதி முதல்) ராகுல் காந்தி தினமும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட டிவிட்டுகளால் பா.ஜ.க.வை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 21ம் தேதியன்று நரேந்திர மோடி உண்மையில் சரண்டர் மோடி என டிவிட் செய்து இருந்தார். இது டிவிட்டரில் டிரெண்டானது.

பாகிஸ்தானும், சீனாவும் எதை விரும்புகிறதோ அதை நீங்கள் சொல்கிறீர்கள்… ராகுல் காந்தியை தாக்கிய அமித் ஷா

ராகுல் காந்தியின் இந்த டிவிட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தற்போது பதில் அளித்துள்ளார். செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அமித் ஷா கூறியதாவது: ஆம். நாம் இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை கையாளும் திறனை கொண்டுள்ளோம். ஆனால் ஒரு பெரிய அரசியல் கட்சியின் முன்னாள் தலைவர், பிரச்சினைகளின் போது மேலாட்டமான எண்ணத்தில் அரசியல் செய்யும் போது அது வேதனையளிக்கிறது. அவரது ஹேஷ்டேக்கை பாகிஸ்தான் மற்றும் சீனா பார்வேர்டு செய்வதை, அவரும், காங்கிரசும் சுயமாக ஆராய வேண்டிய விஷயம். நெருக்கடியான (எல்லை கட்டுப்பாட்டு பகுதி பிரச்சினை) இந்த நேரத்தில் சீனாவும், பாகிஸ்தானும் எதை விரும்புகிறதோ அதை நீங்கள் கூறுகிறீர்கள்.

பாகிஸ்தானும், சீனாவும் எதை விரும்புகிறதோ அதை நீங்கள் சொல்கிறீர்கள்… ராகுல் காந்தியை தாக்கிய அமித் ஷா

லடாக் பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்திற்கு அரசு முழுமையாக தயாராக இருந்தது. ஒரு விவாதத்துக்காக யாரும் வெட்கப்படுவதில்லை. நாடாளுமன்றம் கூட்டப்பட உள்ளது. கலந்துரையாடலாம். 62 முதல் இப்போது வரை விவாதிப்போம். ஆனால் அதே நேரத்தில் நமது வீரர்கள் எல்லையில் அதை எதிர்த்து போராடுகிறார்கள் மற்றும் அரசும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் சாதகமான அறிக்கையை நாம் கொடுக்க கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.