அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து விசிக-வினர் சாலை மறியல்
Dec 15, 2020, 17:53 IST1608035006000
திருப்பத்தூர்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் அம்பேதர் சிலை சேதப்படுத்தப்பட்ட நிகழ்வை கண்டித்து, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு சிலையை சேதப்படுத்தியவர்களை கண்டித்தும், அவர்களை கைதுசெய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்து அழைத்துச்சென்றனர்.