வேளாண் சட்டங்களை கண்டித்து ஆம்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட விசிக, எஸ்டிபிஐ கட்சியினர் கைது

 

வேளாண் சட்டங்களை கண்டித்து ஆம்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட விசிக, எஸ்டிபிஐ கட்சியினர் கைது

திருப்பத்தூர்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து, ஆம்பூரில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினரை போலீசார் கைதுசெய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆம்பூர் ரயில்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டங்களை கண்டித்து ஆம்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட விசிக, எஸ்டிபிஐ கட்சியினர் கைது

இதில், இரு கட்சிகளையும் சேர்ந்த ஏராளமானோர் கலந்தகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டங்களை திரும்ப வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து போராட்டக்கார்கள் பேரணியாக சென்று ரயில்நிலையத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவர்களை கைதுசெய்து வாகனங்களில் அழைத்துச்சென்றனர். இதனால் ஆம்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.