சிஎஸ்கே அணியிலிருந்து விலகும் முக்கிய வீரர்!

 

சிஎஸ்கே அணியிலிருந்து விலகும் முக்கிய வீரர்!

ஐபிஎல் 2020 – தொடரின் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்புடன் செல்கிறது. முதல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியை ராயுடுவின் அதிரடி ஆட்டத்தால் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ். டெல்லி கேபிட்டல்ஸூம் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதிய இரண்டாம் போட்டி இன்னும் பரபரப்பானது. இரு அணிகளின் ஸ்கோரும் சமனாக சூப்பர் ஓவரில் டெல்லி வென்றது. நேற்று ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொண்டது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத். டி வில்லியர்ஸ் பேட்டிங், சோஹலின் பவுலிங்கால் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதேபோல் நேற்றைய போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல் வெற்றிப்பெற்றது.

சிஎஸ்கே அணியிலிருந்து விலகும் முக்கிய வீரர்!

முதல் போட்டியில் அசத்திய அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக நேற்றைய போட்டியில் அறிமுக வீரராக ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினார். ஆனால் அவர் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். அம்பத்தி ராயுடு அணியில் இடம் பெறாதது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அம்பத்தி ராயுடு காயம் காரணமாக மேலும் ஒரு போட்டியில் விளையாட முடியாமல் போகலாம் என்றும் விரைவில் குணமடைந்தால் அடுத்த போட்டியிலேயே விளையாட தகுதி பெறுவார் எனவும் சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.