புழல் ஏரியில் மூழ்கி 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழப்பு

 

புழல் ஏரியில் மூழ்கி 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர்

அம்பத்தூர் அருகே புழல் ஏரியில் குளித்தபோது நீரில் மூழ்கி 17 வயது சிறுவன் உட்பட 3 விளையாட்டு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை
அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(19). ஓட்டப்பந்தய வீரரான இவர், அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (17) உள்ளிட்டோருடன் இணைந்து தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க பயிற்சி பெற்று வந்துள்ளார்.

புழல் ஏரியில் மூழ்கி 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழப்பு

இந்த நிலையில் இன்று மதியம் பயிற்சி முடித்து மணிகண்டன், தமிழசெல்வன் உள்ளிட்ட 8 பேர், அம்பத்தூர் அடுத்த மதுராமேட்டூர் பகுதியில் உள்ள புழல் ஏரிக்கரைக்கு சென்று குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மணிகண்டன், தமிழ்செல்வன் மற்றும் வில்லிவாக்கத்தை சேர்ந்த பிலிப் ஆகியோர் நீரில் மூழ்கினர். இதுகுறித்து அவரது நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் மாதவரம் மற்றும் புழல் பகுதிகளில் இருந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து ஏரியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

புழல் ஏரியில் மூழ்கி 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழப்பு

நீண்ட தேடலுக்கு பின் மணிகண்டன் மற்றும் பிலிப் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். தமிழ்செல்வனின் உடலை தேடும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நீரில் மூழ்கி 17 வயது சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் கள்ளிக்குப்பம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.