முதல் வெற்றியைச் சுவைத்தது விடுதலைச் சிறுத்தைகள்!

 

முதல் வெற்றியைச் சுவைத்தது விடுதலைச் சிறுத்தைகள்!

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. மேற்கு வங்கம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் ஏப்ரல் 6ஆம் தேதியோடு வாக்குப்பதிவு முடிவடைந்தது. ஏப்ரல் 29ஆம் தேதி தான் மேற்கு வங்கத்தில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. இச்சூழலில் இன்று ஐந்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.

முதல் வெற்றியைச் சுவைத்தது விடுதலைச் சிறுத்தைகள்!

தற்போதைய நிலவரத்தின் படி திமுக 158 தொகுதிகளிலும் அதிமுக 75 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. காட்டுமன்னார் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிட்ட சிந்தனைச் செல்வன் வெற்றிபெற்றுள்ளார். தொடர்ந்து நாகப்பட்டினத்தில் போட்டியிட்ட ஆளூர் ஷாநவாஸ் வெற்றிபெற்றிருக்கிறார். வானூர் தொகுதியில் வன்னியரசு தோல்வியடைந்துள்ளார்.