தடைகளை தகர்க்கும் கடவுளான விநாயகருக்கு தடையா? விநாயகர் சிலைகளை நிறுவ அனுமதி தாருங்கள் : பாஜக எல்.முருகன் கோரிக்கை!

 

தடைகளை தகர்க்கும் கடவுளான விநாயகருக்கு தடையா? விநாயகர் சிலைகளை நிறுவ அனுமதி தாருங்கள் : பாஜக எல்.முருகன் கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக தற்போது ஆகஸ்ட் 31 வரை தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த சமயத்தில் விநாயகரின் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 22 ஆம் தேதி வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தடைகளை தகர்க்கும் கடவுளான விநாயகருக்கு தடையா? விநாயகர் சிலைகளை நிறுவ அனுமதி தாருங்கள் : பாஜக எல்.முருகன் கோரிக்கை!

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவ, ஊர்வலம் செல்வதற்கு தடை விதித்துள்ளது.  கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் முன்னெச்சரிக்கையாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தடைகளை தகர்க்கும் கடவுளான விநாயகருக்கு தடையா? விநாயகர் சிலைகளை நிறுவ அனுமதி தாருங்கள் : பாஜக எல்.முருகன் கோரிக்கை!

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன், “விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். விநாயகர் சிலைகளை நிறுவி தனிமனித இடைவெளியோடு மக்கள் தரிசிக்க அனுமதி தரவேண்டும் என்றும் பல்வேறு பணிகளுக்காக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரும் சூழலில் விநாயகர் சிலைகளை நிறுவ தடை ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தடைகளை தகர்க்கும் கடவுளான விநாயகருக்கு தடைபடுவது வேதனை அளிக்கிறது என்றும் முருகன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.