தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்க அனுமதிக்க வேண்டும்! – டி.டி.வி.தினகரன் கோரிக்கை
கொரோனா முடக்கத்தால் எந்த ஒரு நிவாரண உதவியும் கிடைக்காத ஆட்டோ ஓட்டுநர்களை ஆட்டோ ஓட்ட அனுமதிக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில்,
கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் @TTVDhinakaran அவர்களின் ட்விட்டர் அறிக்கை !#ஆட்டோ_ஓட்டுநர்கள்_நலனில்_அமமுக pic.twitter.com/O4aaJ7A9SX
— Nanjil Raja Joel ⓃⓇⒿ (@RajajoelAMMK) May 20, 2020
“கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்குவதற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
அரசிடமிருந்து சிறப்பு உதவிகள் எதுவும் கிடைக்காமல் பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஆட்டோ ஓட்டுனர்கள் இதன் மூலம் ஓரளவுக்கு நிம்மதி பெருமூச்சு விட முடியும். எனவே, தமிழக அரசு உடனடியாக இதனைப் பரிசீலித்து அறிவிக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.