“மக்களுடன் தான் கூட்டணி” – தர்மபுரி பிரச்சார கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு

 

“மக்களுடன் தான் கூட்டணி” – தர்மபுரி பிரச்சார கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு

மக்களுடன் தான் தனக்கு கூட்டணி என்றும், இந்தியாவின் தென்னக நலம் நாடும் கட்சியாக மக்கள் நீதி மய்யம் செயல்படும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி இன்று தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன், அங்குள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் மற்றும் தனியார் மண்டபம் ஒன்றில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, தமிழ்நாட்டில் நேர்மையானவர்கள் நிறைய பேர் உள்ளனர் என்றும், அவர்களை நம்பியே தான் அரசியலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்த கமல்ஹாசன், சமுதாயத்தின் மீதான கோபமும், தன்னை அரசியலுக்கு வர வைத்ததாக கூறினார்.

“மக்களுடன் தான் கூட்டணி” – தர்மபுரி பிரச்சார கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு

மேலும், குழந்தையில் இருந்து இன்று வரை தான் வசதியாகவே வாழ்வதாகவும், இந்த வசதியை தந்தவர்கள் தமிழக மக்கள் என்றும் தெரிவித்த கமல்ஹாசன், வசதியை மட்டும் அனுபவித்து விட்டு அவர்களுக்கான பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் செல்வது பெரிய தவறு என்றும், அது சரிசெய்ய வேண்டும் என்றும் தெவிரித்தார்.

தொடர்ந்து பேசிய கமல்ஹாசன்,,அனைவரும் சேர்ந்து மக்கள் நீதி மையத்தை வலுப்படுத்துங்கள், இந்தியாவின் தென்னக நலம் நாடும் கட்சியாக மக்கள் நீதி மையம் செயல்படும் என்று தெரிவித்தார். மேலும், மக்களுடன் தான் தனக்கு கூட்டணி என்றும் அவர் தெரிவித்தார். இறுதியாக, இன்று ஆட்சி நடத்துபவர்கள் பல வழிகளில் ஊழல் செய்தவர்கள் என்றும், அந்த பல வழிகளில் 8 வழிச்சாலை திட்டமும் ஒரு வழி என்றும் கமல் கூறினார்.