“கமலுடன் கூட்டணி; விரைவில் நல்ல முடிவு” : சரத்குமார் பேட்டி

 

“கமலுடன் கூட்டணி; விரைவில் நல்ல முடிவு”  : சரத்குமார் பேட்டி

ஒரு மித்த எண்ணம் கொண்டவர்கள் இணைந்தால் சிறப்பாக இருக்கும்; கமல் ஹாசனிடம் இருந்து நல்ல முடிவு வரும் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

“கமலுடன் கூட்டணி; விரைவில் நல்ல முடிவு”  : சரத்குமார் பேட்டி

அதிமுக கூட்டணியிலிருந்து சமத்துவ மக்கள் கட்சி வெளியேறிய நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசனுடன் சரத்குமார் இன்று சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்ற நிலையில் அவருடன் ஐ.ஜே.கே. பொதுச்செயலாளர் ரவிபாபுவும் உடனிருந்தார்.

“கமலுடன் கூட்டணி; விரைவில் நல்ல முடிவு”  : சரத்குமார் பேட்டி

இதன் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், தேர்தல் கூட்டணி தொடர்பாக கமல் ஹாசனிடம் இருந்து நல்ல முடிவு வரும்.நல்லவர்கள் எல்லாம் இணையலாம் என கமல் ஹாசன் கூறியதால் சிறப்பான கூட்டணியை உருவாக்க முயற்சி செய்துள்ளோம். மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்துள்ளேன்.எங்கள் கூட்டணி வெற்றி பெற்ற பிறகே முதல்வர் யார் என்பது பற்றி பேசத் திட்டமிட்டுள்ளோம்.ஒரு மித்த எண்ணம் கொண்டவர்கள் இணைந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். கமல் ஹாசனை சந்தித்து அவரது கருத்துக்களை கேட்டு அறிந்துள்ளேன். அவரது கருத்துக்களையும் புரிந்து வைத்துள்ளேன். அவரைச் சார்ந்த பொறுப்பாளர்கள் அமர்ந்து பேச இருக்கிறோம் விரைவில் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம் ” என்றார்.