நாளை முதல் ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு செய்யும் அனைத்து அழைப்புகளும் இலவசம்

 

நாளை முதல் ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு செய்யும் அனைத்து அழைப்புகளும் இலவசம்

வாடிக்கையாளர்களை ஈர்க்க, தக்க வைக்க புதிய புதிய திட்டங்களை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. குறிப்பாக ஜியோ அவ்வப்போது அதிரடி ஆஃபர்களை அள்ளிக்கொடுத்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவருகிறது. அதன்படி, 2021 புத்தாண்டை முன்னிட்டு புது சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் அனைத்து நெட்வொர்க்களுக்கும் இலவசமாக பேசலாம் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

நாளை முதல் ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு செய்யும் அனைத்து அழைப்புகளும் இலவசம்

டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றுவரும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள், அம்பானி மற்றும் அதானி நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். அதனொரு பகுதியாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் தாங்கள் பயன்படுத்தும் ஜியோ சிம்மை புறக்கணித்து வருகின்றனர், பஞ்சாப், ஹரியானாவில் நூற்றுக்கணக்கான ஜியோ டவர்களையும் விவசாயிகள் சேதப்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம் புகார் அளித்துள்ளது. விவசாயிகளை கூல் செய்யவே இந்த கட்டண நீக்க அறிவிப்பா? என்ற கேள்வியை எழுப்புகிறது.