“ரேஷன் கடைகளில் அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும்” – அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி!

 

“ரேஷன் கடைகளில் அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும்” – அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி!

கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை தலைமைச் செயலகம் அருகே உள்ள ரேஷன் கடையில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணியில் இருந்த பெண் ஊழியரிடம் ரேஷன் கடையில் வழங்கப்படுகின்ற பொருட்களின் தரம் குறித்தும் எத்தனை கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது என்பது குறித்தும் அமைச்சர் கேட்டறிந்தார்.

“ரேஷன் கடைகளில் அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும்” – அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி!

தொடர்ந்து ரேஷன் கடையில் உள்ள ஆவணங்களையும் பயோமெட்ரிக் மெஷினையும் ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்யப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே இன்று திடீர் ஆய்வு செய்தேன்.

“ரேஷன் கடைகளில் அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும்” – அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி!

தமிழ்நாட்டிலுள்ள ரேஷன் கடைகளில் இருக்கக்கூடிய அனைத்து காலி பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும். மாதம் 30 நாட்களும் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கான பொருட்கள் வினியோகம் செய்யப்படும்” என்றார்.