“அரசு கல்வி நிறுவனங்களில் இனி ஆங்கிலம் பயன்படுத்த கூடாது; அனைத்தும் தமிழிலேயே இருக்க வேண்டும்”

 

“அரசு கல்வி நிறுவனங்களில் இனி ஆங்கிலம் பயன்படுத்த கூடாது; அனைத்தும் தமிழிலேயே இருக்க வேண்டும்”

அரசு கல்வி நிறுவனங்களில் அனைத்து ஆவணங்களையும் தமிழ் மொழியில் மட்டுமே கையாள வேண்டும் என உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

“அரசு கல்வி நிறுவனங்களில் இனி ஆங்கிலம் பயன்படுத்த கூடாது; அனைத்தும் தமிழிலேயே இருக்க வேண்டும்”

இதுதொடர்பாக உயர் கல்வித் துறை துணை செயலாளர் ஜெ.மோகன் ராமன் வெளியிட்ட அரசாணையில், “தமிழகத்தின் ஆட்சிமொழி தமிழ் மட்டுமே என்பதால் உயர் கல்வித் துறையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் அதன் கீழ் செயல்படும் இயக்ககங்களில் வெளியிடப்படும் ஆணைகள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றில் சில விதிவிலக்கு தவிர அனைத்து வகை அறிவிப்புகளையும் தமிழில் மட்டுமே பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அரசு கல்வி நிறுவனங்களில் இனி ஆங்கிலம் பயன்படுத்த கூடாது; அனைத்தும் தமிழிலேயே இருக்க வேண்டும்”

தமிழக அரசுத் துறைகளில் கையாளப்படும் கோப்புகள், அரசாணைகள், சுற்றறிக்கைகள், கடிதங்கள் உள்ளிட்டவற்றில் ஆங்கிலம் அதிகம் பயன்படுத்தப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து, தமிழில் மட்டுமே அறிவிப்புகளை வெளியிடவேண்டும் என்று அனைத்துத் துறைகளையும் அறிவுறுத்தி, தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் சமீபத்தில் அரசாணை வெளியிட்டிருந்தார். அதில், 1956ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி, தமிழகத்தில் தமிழ் மட்டுமே ஆட்சி மொழி என்பதை மேற்கோள்காட்டப்பட்டிருந்தது. இந்த அரசாணையை சுட்டிக்காட்டி தற்போது உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.