பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா பாதிப்பு!

 

பாலிவுட்  நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா பாதிப்பு!

பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியாஉள்ளிட்ட பல படங்களில் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார்.தற்போது இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வரும் கங்குபாய் கத்தியாவாடி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்தார்.

பாலிவுட்  நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா பாதிப்பு!

இந்நிலையில் நடிகை ஆலியா பட் தனக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது . நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறேன் என்று கூறியுள்ளார்.முன்னதாக பாலிவுட் பிரபலங்களான சஞ்சய் லீலா பன்சாலி,ஆமிர்கான், ரன்பீர் கபூர், மிலிந்த் சோமன், மாதவன் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

பாலிவுட்  நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா புதிதாக 72,330 பேர் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,22,21,655 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ஒரே நாளில் 459 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில் மொத்த எண்ணிக்கை 1,62,927 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.