“ஆசைக்கு இணங்காத மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்”-போதையில் தவறிய பாதை

 

“ஆசைக்கு இணங்காத மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்”-போதையில் தவறிய பாதை

ஒரு கணவன் தன்னிடம் ஆசையாக பேசாத மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரின் முகத்தில் ஆசிட் வீசிய சம்பவம் பலரை அதிர்ச்சியடைய் செய்துள்ளது.

“ஆசைக்கு இணங்காத மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்”-போதையில் தவறிய பாதை

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஈஸ்வர ராவ் என்ற நபர் அங்குள்ள திலாதேவி என்ற தையல் தொழில் செய்யும் பெண்ணை 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார் .அவர்களுக்கு 12 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது .இந்நிலையில் அந்த கணவன் ஒரு ஓவியரும் ஆவார் .அவருக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்துள்ளது .இதனால் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் சண்டை போடுவார் .
மேலும் அவரின் மனைவியின் நடத்தை மீதும் அவருக்கு சந்தேகம் இருந்துள்ளது ,இதனால் அவர் குடித்து விட்டு வந்து அவரிடம் தரக்குறைவாக பேசி சண்டை போட்டு வந்துள்ளார் .
கடந்த சனிக்கிழமையன்று அந்த கணவன் அதிகமாக மது அருந்தி விட்டு வந்து அவரின் மனைவியிடம் சண்டை போட்டுள்ளார் .அப்போது அவர் ஒளித்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து அவரின் முகத்தில் ஆசிடை வீசியுள்ளார் .இதனால் முகம் வெந்து துடித்து கொண்டிருந்த அவரை காப்பாற்ற அவரின் 12 வயது மகளும் அங்கே வந்துள்ளார் .அப்போது அவர் வீசிய ஆசிட் அவரின் மகளின் மீதும் விழுந்துள்ளது .இதனால் அவரும் கடுமையான காய முற்றார் .பின்னர் இருவரையும் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது .போலீசார் அவரின் கணவனை பிடித்து அவரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .

“ஆசைக்கு இணங்காத மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்”-போதையில் தவறிய பாதை