அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு –  முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

அலங்காநல்லூரில் ஜன.16இல் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைக்கின்றனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு –  முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பண்டிகையான பொங்கல் பண்டிகையின்போது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். ஜல்லிக்கட்டு போட்டியானது அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு –  முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

இந்த முறை கொரோனா காரணமாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்படுமா என்ற சந்தேகம் இருந்து வந்த நிலையில் தமிழக அரசு சமீபத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தது. இதனால் வீரர்கள் மாடுகளை தயார் செய்து வருகின்றனர். வருகின்ற 14ஆம் தேதி அவனியாபுரத்தில், 15ஆம் தேதி பாலமேட்டிலும், 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் 300 வீரர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு –  முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

இந்நிலையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஜனவரி 16 ஆம் தேதி முதல்வர் , துணை முதல்வர் இருவரும் தொடங்கி வைக்கின்றனர் என்று கூறியுள்ளார்.