ஆலங்குடி: புதிய ஸ்கேன், எக்ஸ்ரே கருவிகளை துவக்கி வைத்த விஜயபாஸ்கர்!

 

ஆலங்குடி: புதிய ஸ்கேன், எக்ஸ்ரே கருவிகளை துவக்கி வைத்த விஜயபாஸ்கர்!

லங்குடி அரசு மருத்துனையில் புதிய ஸ்கேன் மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியினை துவக்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று(2.8.2020) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் 1.15 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார். அதே போல், அதே மருத்துவமனையில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய ஸ்கேன் கருவியினையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.

ஆலங்குடி: புதிய ஸ்கேன், எக்ஸ்ரே கருவிகளை துவக்கி வைத்த விஜயபாஸ்கர்!

இந்நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.உமாமேஸ்வரி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தலைவர் பி.கே.வைரமுத்து, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.மரிய லுயிஸ் பெக்கி ஹோம்ஸ், அரசு தலைமை மருத்துவர் பெரியசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.