அசிங்கப்படுத்திய திமுக ; கதறி அழுத அழகிரி : செயற்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?

 

அசிங்கப்படுத்திய திமுக ; கதறி அழுத அழகிரி : செயற்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?

திமுக உடனான தொகுதி பங்கீடு இழுபறியில் உள்ள நிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கண்ணீர் விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததில் இருந்தே தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.ஒருபுறம் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு மறுபுறம் பிரச்சாரம் என திமுக ,அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் படு பிஸியாக உள்ளனர். திமுக கூட்டணியை பொருத்தவரையில் 180 தொகுதிகளில் போட்டியிட திமுக முடிவு செய்துள்ளது. அதேபோல் விசிக 6, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 ,மனிதநேய மக்கள் கட்சிக்கு 2,முஸ்லிம் லீக் 3 என திமுக தொகுதி பங்கீடு செய்துள்ளது.

அசிங்கப்படுத்திய திமுக ; கதறி அழுத அழகிரி : செயற்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?

இந்த சூழலில் மதிமுக மற்றும் காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் உள்ளது. இருப்பினும் மூன்றாவது அணிக்கு செல்ல வாய்ப்பில்லை என மதிமுக, காங்கிரஸ் கட்சிகள் சொல்லி வருகிறது .இதனால் நாளைக்குள் பேச்சுவார்த்தை முடிவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக உடன் கைகோர்த்துள்ள தேசிய கட்சியான காங்கிரஸ் தங்களுக்கு 27 தொகுதிகள் மற்றும் ஒரு எம்பி சீட் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் திமுக 22 தொகுதிகள் தருவதாகவும், ஒரு ராஜ்யசபா சீட் வருவதாகவும் கூறி உள்ளது, இதற்கு காங்கிரஸ் தரப்பில் மறுத்துவரும் நிலையில் ,திமுகவும் விடாப்பிடியாக 22 தொகுதியிலேயே பேச்சுவார்த்தையே முடக்கியுள்ளது.

அசிங்கப்படுத்திய திமுக ; கதறி அழுத அழகிரி : செயற்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?

இதற்காக கடந்த சில நாட்களாக அண்ணா அறிவாலயம் சென்று வருகிறார் கே.எஸ் .அழகிரி , தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தும் வருகிறார். அப்போது இறுக்கமான முகத்தோடு, கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. விரைவில் தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறிவருகிறார்.

அசிங்கப்படுத்திய திமுக ; கதறி அழுத அழகிரி : செயற்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?

இந்நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில் செயற்குழுக் கூட்டத்தை காங்கிரஸ் கூட்டியது . அதில் பேசிய கே. எஸ். அழகிரி, தொகுதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதை விட நம்மை நடத்தும் விதம்…. என கூறியவாறு கண்கலங்கி உள்ளார் . பின்னர் கண்ணாடியை கழற்றி கண்ணீரை துடைத்த அவர், இனி நான் பேச்சுவார்த்தைக்கு செல்ல மாட்டேன். நீங்களே செல்லுங்கள். நான் இறுதியில் வந்து கையெழுத்து போட வருகிறேன் என்று கூறியுள்ளார். திமுக செயல்பட்டால் காங்கிரஸ் தலைவர் அழுதுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.