தடுப்பூசி தயாரிச்ச நிறுவனங்கள் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டவை.. ஆக மக்கள் எங்க கட்சியத்தான் பாராட்டணும்

 

தடுப்பூசி தயாரிச்ச நிறுவனங்கள் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டவை.. ஆக மக்கள் எங்க கட்சியத்தான் பாராட்டணும்

கொரோனா தடுப்பூசி தயாரித்த 2 நிறுவனங்களும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டவை, ஆகையால் தடுப்பூசிக்காக மக்கள் காங்கிரஸ் கட்சிக்குதான் வாழ்த்து, பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும் என்று அந்த கட்சி தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி நம் நாட்டில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசிக்காக பா.ஜ.க. நற்பெயர் வாங்க முயற்சி செய்கிறது. ஆனால் காங்கிரசுக்குதான் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை மக்கள் தெரிவிக்க வேண்டும் என்று அந்த கட்சியின் பீகார் பிரிவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் சர்மா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

தடுப்பூசி தயாரிச்ச நிறுவனங்கள் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டவை.. ஆக மக்கள் எங்க கட்சியத்தான் பாராட்டணும்
அஜித் சர்மா

புத்தாண்டில் 2 தடுப்பூசிகளை கிடைத்ததில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் அது குறித்து மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது. இந்த சந்தேகத்தை நீக்க, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் அந்நாட்டின் தலைவர்கள் முதலில் தடுப்பூசியை போட்டு கொண்டது போல், பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், பிரதமருமான நரேந்திர மோடி முதலில் தடுப்பூசியை போட்டுக் கொண்டு மக்களின் நம்பிக்கையை வெல்வார் என்று நான் நம்புகிறேன்.

தடுப்பூசி தயாரிச்ச நிறுவனங்கள் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டவை.. ஆக மக்கள் எங்க கட்சியத்தான் பாராட்டணும்
கோவிட்-19 தடுப்பூசி

இரண்டு தடுப்பூசிகளுக்கும் பா.ஜ.க. பெயர் வாங்க முயற்சி செய்கிறது. ஆனால் பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்கள்தான் கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரித்தன. இந்த நிறுவனங்கள் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டவை. ஆகையால் காங்கிரஸ் கட்சிக்குதான் வாழ்த்து மற்றும் பாராட்டுக்களை மக்கள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.