விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து, ஏஐஒய்எப் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

 

விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து, ஏஐஒய்எப் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தேனி

டெல்லியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டித்து, தேனியில் ஏஐஒய்எப் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏஐஒய்எப் அமைப்பின் மாவட்ட செயலாளர் தமிழ்பெருமாள், துணைத் தலைவர் அய்யனார், மாவட்ட குழு உறுப்பினர் வீரய்ய உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து, ஏஐஒய்எப் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை, மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவும் கோரி, அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்