விமான நிலையம் செல்வோரும் புறநகர் ரயிலில் பயணிக்கலாம்!

 

விமான நிலையம் செல்வோரும் புறநகர் ரயிலில் பயணிக்கலாம்!

வெளியூர் செல்வதற்கான எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட் இருந்தால் சென்னை புறநகர் ரயிலில் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

விமான நிலையம் செல்வோரும் புறநகர் ரயிலில் பயணிக்கலாம்!

சென்னை விமான நிலையத்துக்கு செல்லக் கூடியவர்களும் புறநகர் ரயிலில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அத்தியாவசிய தனியார் நிறுவன பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் தெற்கு ரயில்வே இவ்வாறு கூறியுள்ளது. புறநகர் ரயில்சேவையில் 154 ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக 50 ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விமான நிலையம் செல்வோரும் புறநகர் ரயிலில் பயணிக்கலாம்!

செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்காக புறநகர் ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த புறநகர் ரயில் சேவையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை .இதையடுத்து தனியார் நிறுவன ஊழியர்கள், ஊடக ஊழியர்கள், அனைத்து கல்வி நிறுவனம், அத்தியாவசிய சேவையாற்றும் நிறுவனங்கள், பாதுகாப்பு ஏஜென்சி ஊழியர்கள், பார் கவுன்சிலில் உறுப்பினராக உள்ள வழக்கறிஞர்கள் ஆகியோரும் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.