மும்பை செல்லவிருந்த ஏர்ஆசியா விமான விபத்து தவிர்ப்பு !

 

மும்பை செல்லவிருந்த ஏர்ஆசியா விமான விபத்து தவிர்ப்பு !

துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா விமானம் மோசமான வானிலை காரணமாக 35 அடி கீழே ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து விபத்தில் சிக்கி இரண்டாக உடைந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு விமான விபத்து நிகழ்ந்திருக்கக் கூடிய சூழல் ஏற்பட்ட நிலையில் அது சாதுரியமாக தவிர்க்கப்பட்டுள்ளது.

மும்பை செல்லவிருந்த ஏர்ஆசியா விமான விபத்து தவிர்ப்பு !

ராஞ்சியிலிருந்து மும்பை செல்லவிருந்த ஏர் ஆசியா விமானம் விபத்துக்குள்ளாக இருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாகவும் , சாதுரியமாகவும் தவிர்க்கப்பட்டது. பறவை மோதியது தொடர்ந்து விமானி உடனே விமானத்தை நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.

மும்பை செல்லவிருந்த ஏர்ஆசியா விமான விபத்து தவிர்ப்பு !

இது போன்ற நேரங்களில் சிறிய விமானங்களைப் பொறுத்தவரை, விமானத்தின் கட்டமைப்பிற்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்படக்கூடும். பெரும்பாலான பறவை தாக்குதல்கள் பகல் நேரங்களில் நிகழ்கின்றன என்றும் விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.